திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை(25) மாலை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி. நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோரால் பாடசாலை உபகரணகள் தி/இ.கி.ச. இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவுக் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கிவைக்கப் பட்டன.
இதன் பொழுது மாணவர்களது கல்வி விழிப்புணர்வு நாடகம், போதைப் பொருள் விழிப்புணர்வு கூத்து, கலாச்சார நடனம் பாடல் என பல கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித் குமார், செயலாளர் இளங்கோவன் ஜெய வதனி, பொருளாளர் ஜீவரத்தினம் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் இவ் நிகழ்வை ஒழுங்கமைக்க திருமதி. எஸ் .மனோகாந்தன் என்பவரால் அனுசரணை வழங்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த நிகழ்வில் கடற் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்கள், அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பங்கு கொண்டனர்.
அறிவு ஒளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
bytrinco mirrer
-
0