திருகோணமலையில் கலைச்சங்கமம் இன்னிசை நிகழ்வு.!

(அ . அச்சுதன்) திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் கலைச்சங்கமம் இன்னிசை நிகழ்வு 09.12.2023 (சனிக்கிழமை) நேற்று மாலை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, வாசகர் வட்டத்தின் தலைவர் சரவணபஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ. இராஜசேகர், சிறப்பு விருந்தினராக சனசமூக உத்தியோகத்தர் எஸ். முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, வீணை நிகழ்வு, திருகோணமலை மாவட்டத்தின் சிரேஷ்ட, இளைய பாடகர்கள் கலந்துகொண்டு சிறப்பாக பாடல் பாடியிருந்தனர். இந்நிகழ்வினை, கவிஞர் க.யோகானந்தம் தொகுத்து வழங்கியிருந்ததுடன், வரவேற்புரையை நூலக சேவகா ரூ.பிரியதர்சினி மற்றும் நன்றியுரையை வாசகர் வட்டத்தின் ஆலோசகர் அ. அச்சுதன் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் மூத்த பாடகர்கள் தியாகராஜா, மு.சிவகங்காதரன், க.நேமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுபாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post