250 முன்பள்ளி ஆசிரியைகளை பாராட்டி கெளரவிப்பு..!

 


(அ . அச்சுதன்) 


பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் கல்விச்சேவை புரியும் மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த  250 முன்பள்ளி ஆசிரியைகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ,மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்பள்ளிகளுக்கான இணைப்பாளர் எஸ்.ஏ.பௌமி தலைமையில் மூதூர் தனியார் மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச முன்பள்ளி ஆசிரியர் சங்கம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது முதலில் முன்பள்ளி ஆசிரியைகள் , அதிதிகள் உள்ளிட்டோர் மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியங்களோடு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு ஆசிரியைகள் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது உயர்தரப் பிரிவில் கிழக்கு மாகாணத்தில் மூதூர் கல்வி வலயம் 1 ஆம் இடம் பெற்றமைக்காக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் அவர்கள் , முன்பள்ளி ஆசிரியைகளால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வறா நளீம் கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப்பின் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஏ.அப்பாஸ் ,மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.













Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post