(அ . அச்சுதன் )
சர்வதேச சிறுவர் ,முதியோர் தினமான ஒக்டோபர் 01ந் திகதியை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் விசேட நிகழ்வு இன்று (17)இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற முதியோர் சிறுவர் தின நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. "சிறுவர்கள் எல்லாவற்றையும் விட மேலானவர்கள்" எனும் தொனிப்பொருளின் கீழ் இம் முறை சிறுவர் தின கொண்டாட்டம் இடம் பெற்றது.
இதில் முதியோர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய பாடல் இசை நிகழ்வுகளை அரங்கேற்றிருந்தனர்.
இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,சமூக சேவைகள் உத்தியோகத்தர் ப.சுதன், கப்பல்துறை ஆயுர்வேத தளவைத்தியசாலை வைத்தியர் டொக்டர் மல்சா ஜெயரட்ண ,சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ,பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.