(அன்புவழிபுரம் நிருபர் )
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் பொது நூலகம் மற்றும் ஓகம் கலைப்பள்ளி இணைந்து யோகாசன பயிற்சி நிகழ்வு நேற்று 14-10-2023 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது.
யோகாசன பயிற்சியினை ஓகம் கலைப்பள்ளி யோகாசன ஆசிரியர்கள் குகதாஸ் ராம்கிசன், திருமதி. கெளரிசாந்தி ராம்கிசன் வழங்கினார்கள்.
நிகழ்வில் திருகோணமலை நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் என். பரமேஸ்வரன், பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன், சனசமூக உத்தியோகத்தர் எஸ். முரளிதரன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.