தேசோதய சபை தலைவராக டாக்டர் ரவிச்சந்திரன்..!

திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் நேற்று 31.08.2023.திருகோணமலை மாவட்ட தேசோதய சபை பொதுக் கூட்டத்தில் தலைவர் தெரிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட தேசோதய சபையின் தலைவராக டாக்டர் என். ரவிச்சந்திரன் அவர்கள் தெரிவானார். டாக்டர் என். ரவிச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்ட பின்பு அவரின் சிறப்பு உரையில் "எனது முதற் பணியாக சமூக நல்லிணக்கத்திற்காக உழைப்பது தான் என்பதனை வலியுறுத்திக் கூறுகின்றேன். புதிய நிருவாக சபைக்குப் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் டாக்டர் என். ரவிச்சந்திரன் செயலாளர் ஜனாப் ஏ. எம்.ஏ. மஜீத் (ஜே. பீ) பொருளாளர் திருமதி ஏ. ஜி. குசுமலதா இணைத்தலைவர்களாக ஜனாப். நிஹான் மொகமது, ஜெ. செல்வராணி இணை செயலாளர்களாக ஜனாப் ஏ. எம். எம். பரீட், திரு. ஓ. டீ. பெரேரா ஆலோசகர்களாக திரு. பீ. டீ. நவரட்ணம், எம். எம். சலாம் (ஜீ. எஸ்), திருமதி கே. கமலவேணி ஆகியோருடன் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு தேசோதய அலகுகளுக்கும் தலா ஐந்து பேர் வீதம் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post