ஈச்சிலம்பற்று நிருபர்
திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் வேண்டு கோளுக்கு அமைய ஈச்சிலம்பற்று பிரதேச வைத்திய வைத்தியசாலையில் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் 93 நோயர்hகளுக்கான பொருட்கள் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் இன்று(02.10.2020) திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரள அவர்களிடம் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் திரு.கண்டுமணி லவகுசராசா அவர்களால் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.வீ.பிரேமானந்த அவர்கள் ஊடாக உரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இப் பொருட்கள் கையளிப்பு நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் திரு.என்.பிரதீபன், மேலதிக மாவட்ட இரசாங்க அதிபர் ஐனாப்.எம்.ஏ.அனஸ், டீ.எம்.சீ. உதவிப்பணிப்பாளர் திரு.கே.சுகுணதாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.வீ.பிரேமானந்த் அவர்களும் எமது அகம் மனிதாபிமான வள நிலையம் உதவி இணைப்பாளர் திரு.அழகுராசன் மதன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகோரும் கலந்து கொண்டனர்.
வெருகலில் உள்ள 93 கொரோனா நோயாளர்களுக்கு AHRC நிறுவனத்தால் உதவி
bytrinco mirrer
-
0