(சேனையூர் நிருபர்)
சீனக்குடா அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா
20.01.2018 அன்று கிரியையுடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (21) எண்ணெய்க்காப்பு நிகழ்வும் திங்கட்கிழமை (22) மஹாகும்பாபிஷேகமும் இடம் பெறவுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்று மகேஷ்வர பூசையுடன் இனிதே நிறைவுறும்.
சீனக்குடா வாழ் மக்கள் இன மத பேதமின்றி நடத்தவிருக்கும் இவ் மாபெரும் உற்சவம். இனிதாய் நிறைவு பெற எல்லாம் வல்ல ஸ்ரீ சித்தி விநாயகர் அருள் புரிவார் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்