கிழக்கில் வருடாந்த மாநாடும் ஓய்வு பெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பும்.!

கிழக்கு மாகாண நூலகப் பணியாளர்களின் வருடாந்த மாநாடும் , ஓய்வு பெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பு விழாவும் 20 - 01 - 2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை நூலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண நூலகப் பணியாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ரீ.சபறுள்ளாகான் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இவ் விழாவில் வரவேற்புரையை ஒன்றியத்தின் செயலாளர் க. வரதகுமார் வழங்க, இதன் போது ஓய்வு பெற்ற நூலகர்களை பாராட்டி கெளரவிப்பும் இடம் பெறும்.
விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் அவர்களும் கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆனையாளர் என்.மணிவன்னன்,மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களான, கே.சித்திரவேல், எஸ்.சுதாகரன்,ஏ.ரீ.எம். றாஃபி மற்றும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எம்.ஆர்.எப்.றிப்கா சபீன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post