கிண்ணியாவில் பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர், இன்று (13) காலை உயிரிழந்துள்ளார். இதற்கமைய, கிண்ணியாவில் பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் பலியானோரின் தொகை, ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்றையதினமும் இருவர் உயிரிழந்திருந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, மாஞ்சோலைச்சேனை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கட்ட மிரான் பைசல் (வயது 39) என்ற, இரண்டு பிள்ளையின் தந்தையே, இன்று உயிரிழந்துள்ளார். இவரது சகோதரி பாத்திமா நபீயா (வயது 36), டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த வெள்ளிக்சிழமை (10) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு மூலம் மேலும் ஒருவர் பலி -கிண்ணியாவில் 9 பேர் இதுவரை
byRajkumar
-
0